states

img

பிரம்மாண்டமாக எழுந்த அம்பேத்கர் சிலை

விஜயவாடா, ஜன. 20 - ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி’ டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் மிக உய ரமான சிலையை ஆந்திர மாநில அரசு அமைத்தது. அது  வெள்ளியன்று மிகப்பிரம் மாண்டமான விழாவில் பொது மக்களின் பார்வைக்கு முதல்  வர் ஜெகன்மோகன் ரெட்டி யால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜய வாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் டாக்டர் அம்  பேத்கரின் சிலை அமைக்கப் பட்டுள்ளது. இந்த சிலை 125 அடி உயரம் கொண்டதாக உள்ள  நிலையில், 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்  பட்டுள்ளதன் காரணமாக, இதன் மொத்த உயரம் 206 அடி யாக உள்ளது. ரூ. 404.35 கோடி செலவில் 18.81 ஏக்கர் நிலத்தில் அமைக்  கப்பட்டுள்ள இந்த சிலை, 400 மில்லியன் டன் எஃகு மற்றும் 120 மில்லியன் டன் வெண்கலத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு ஸ்மிருதி வனம் என்று  பெயரிடப்பட்டு, அம்பேத்கரின் சிலைக்கு அருகே பூங்காக் களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மைதானத்தில் மினி தியேட்டர், அருங்காட்சியகம், வாகனம் நிறுத்துமிடம், உணவு விடுதி உள்ளிட்ட பல அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை காண்பிக்க எல்இடி  திரைகள் நிறுவப்பட்டுள்ளன.

மேலும் 2,000 இருக்கைகள் கொண்ட ஒரு அரங்கமும், உணவு விடுதியும் அமைக்கப்பட்டுள்ளது.  முன்னதாக அம்பேத்கரின் சிலையைத் திறந்துவைத்த ஆந்  திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, “நம் நாட்டில் ஆயிரக்க ணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த சாதிய வரலாற்றை மாற்றிய ஒரு அழியாத சமூக சீர்திருத்தவாதியின் சிலையை விஜயவாடாவில் இன்று நாம் திறந்து வைக்கிறோம் ” என்று மக்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார்.